ஜெயலலிதாவுடன் டைரக்டர் எஸ்.ரவிக்குமார் திடீர் சந்திப்பு

Webdunia
வியாழன், 28 ஏப்ரல் 2016 (06:36 IST)
முதல்வர்  ஜெயலலிதாவை டைரக்டர் கே.எஸ். ரவிக்குமார் திடீரென சந்தித்துப் பேசினார்.
 

 
அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவை, டைரக்டர் கே.எஸ். ரவிக்குமார் தனது குடும்பத்தினருடன் சந்தித்தார். அப்போது, தனது மகள் திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்துமாறு கேட்டுக் கொண்டார். மேலும், தனது மகள் திருமண அழைப்பிதழை முதல்வரிடம் வழங்கினார். அதனை ஜெயலலிதா பெற்றுக் கொண்டு, மணமக்களுக்கு முன்னதாகவே வாழ்த்து தெரிவித்தார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்