இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை நடந்து வருகிறது. இதன் இறுதிக்கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த வியாழக்கிழமை கர்நாடக வழக்கறிஞர் துஷ்யந்த் தாவேயின் வாதத்தை தொடர்ந்து ஆச்சாரியா அந்த வாதத்தை தொடர்ந்தார். அவர் கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பில் உள்ள பிழைகளை முன் வைத்து வாதம் செய்தார்.
மீண்டும் இந்த விசாரணை நாளை தொடங்க உள்ளது. நளை நடைபெறும் இந்த விசாரணையில் கர்நாடக வழக்கறிஞர் ஆச்சாரியா தனது வாதத்தை தொடருவார். தமிழக தேர்தல் வரும் வேளையில், ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு மனுவின் விசாரணையும் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.