அப்போது பேசிய விஜயகாந்த், ‘’நான் விவசாய குடும்பத்தில் இருந்து வந்துள்ளேன். இந்த பூமி அனைத்தும் விவசாய பூமியாகும். ஆனால் இங்கு விவசாயம் சரியாக நடைபெறவில்லை. இங்குள்ள கிராமங்களில் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது.
என்னை பற்றி கேட்டுப்பாருங்கள், விருத்தாசலம், ரிஷிவந்தியம் ஆகிய பகுதிகளில் டேங்கர் லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்தேன். அதேபோல் இங்கும் நான் வெற்றி பெற்று வந்ததும் மக்களுக்கு தேவையான குடிநீர் கிடைக்க செய்து, குடிநீர் பஞ்சத்தை போக்குவேன்.
எனக்கு அதிமுக, திமுக, பாமக தொண்டர்கள் யாரும் எதிரிகள் கிடையாது. அவர்களது கட்சிகளின் தலைமையே எனக்கு எதிரிகள் ஆவர். ஆறு கட்சி கூட்டணியான எங்களுக்கு எப்பொழுதும் ஏறுமுகம்தான்” என்று கூறியுள்ளார்.