காவல் துறையினர் தினமும் யோகா பயிற்சி நடத்த கோரிக்கை விடுத்துள்ளனர். இருந்தாலும் நடைமுறை சிக்கல் காரணமாக வாரம் தோறும் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் காவல் துறையினர், யோகா பயிற்சி தங்களுக்கு புத்துணர்வு அளித்துள்ளதாகவும், விரைவில் தொப்பைக்கும், மன உளைச்சலுக்கும் குட்பை சொல்லிவிடுவோம் என்று தெரிவித்துள்ளனர்.