இதனையடுத்து அவர் ஆர்கே நகரில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று மாலை ஆர்கே நகரின் தண்டையார்பேட்டை, குறுக்கிப்பேட்டை, நேதாஜி நகர், செழியன் நகர், கருணாநிதி நகர் ஆகிய பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
ஐந்து வருடத்துக்கு ஒருமுறை ஓட்டு கேட்க மட்டும் வரும் நீங்கள் நாளைக்கு வெற்றி பெற்றால் வருவீர்களா என மாணவி மஞ்சு கேட்ட கேள்விக்கு கண்டிப்பாக வருவேன் என்றார் தினகரன். நீங்க அறிவிக்கற திட்டம் எதுவும் மக்களுக்கு முழுசா வந்து சேர்வது இல்லை என மாணவி அடுத்த கேள்வியை கேட்க அதற்கு பதில் அளிக்க முடியாமல் தினரன் நின்றார்.
இதனையடுத்து அங்கு நின்றிருந்த தினகரன் ஆதரவாளர்கள் அந்த மாணவியையும் அவரது தாயையும் திட்ட ஆரம்பித்தனர். அதற்கு பதிலடி கொடுத்த அந்த மாணவி, நான் ஒட்டு போடுறன், கேள்வி கேட்பேன். கேள்வி கேட்டா யாராக இருந்தாலும் பதில் சொல்லனும் என்றார் அதிரடியாக.