சிலையை அகற்ற நினைக்கும்‌ திமுக: காயத்ரி ரகுராம் கண்டனம்

ஞாயிறு, 12 செப்டம்பர் 2021 (19:26 IST)
சுதந்திர போராட்ட வீரரின் சிலையை அகற்ற நினைக்கும் திமுக அரசுக்கு தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக நடிகையும் பாஜக பிரபலமுமான காயத்ரி ரகுராம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்
 
இந்திய சுதந்திர போராட்டத்தில் கலந்துகொண்ட வீரர்களில் ஒருவரான மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் திருவுருவச் சிலையை அகற்ற நினைக்கும் திமுகவை கண்டித்து கே கே செல்வகுமார் என்பவர் போராட்டம் நடத்தி வருகிறார். இந்த படத்தில் தனது ஆதரவு உண்டு என நடிகை காயத்ரி ரகுராம் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். அவர் தனது டுவிட்டில் கூறியிருப்பதாவது:
 
மாமன்னர்‌ பெரும்பிடுகு முத்தரையர் வரலாற்று திரு உருவ சிலையை அகற்ற நினைக்கும்‌ திமுகவை கண்டித்து போராட்டம் நடத்தும் கே.கே.செல்வகுமார் அவர்களுக்கு நான் ஆதரிக்கிறேன். திமுக சுதந்திர போராட்ட வீரர் சிலையை நகர்த்துவதன் மூலம் மக்களின் உணர்வுகளை புண்படுத்தக்கூடாது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்