அதன் பின்னர் குளித்து விட்டு வரும் போது யானைக்கு அங்கு உள்ள உணவகங்களில் இட்லி வடை வாங்கி கொடுப்பது ஒரு டீயும் வாங்கி கொடுக்கிறார். தேனீர் கடையில் சூடான டீயை வாங்கி அதை ஆற்றி யானைப்பாகன் கொடுப்பதும் அதை அந்த யானை குடிப்பதுமான வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. மனிதர்களைப் போலவே யானையும் இட்லி வடை சாப்பிட்டுவிட்டு டீ குடிக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது