நேற்று இரவு சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு ஒரு தனியார் பேருந்து புறப்பட்டது. அதில் 8 பெண்கள் உட்பட மொத்தம் 32 பயணிகள் செய்தனர். இரவு 11 மணி அளவில் பேருந்தை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு, ஓட்டுனரும் நடத்துனரும் அங்கிருந்து சென்று விட்டனர். நீண்ட நேரம் ஆகியும் வரவில்லை. இதனால் பயணிகள் எரிச்சல் அடைந்தனர்.
இதனால், பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். அதன்பின் விடியற்காலை 4 மணியளவில் வேறொரு ஓட்டுனரால், அந்த பேருந்து இயக்கப்பட்டது. இதுபற்றி போலீசாரிடம் புகார் கூறப்பட்டது.