இந்த திட்டத்தின்படி ஓட்டுனர் இல்லாமல் மூன்று பெட்டிகளை கொண்ட 26 மெட்ரோ ரயில்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் கூறியபோது இந்த ஒப்பந்தத்தின் கீழ் 2024 ஆம் ஆண்டு முதல் சென்னை மெட்ரோ ரயிலில் ஓட்டுனர் இல்லாத ரயில் இயக்கப்படும் என்றும் ஓட்டுநர் இல்லாத ரயிலின் சோதனை இயக்கம் விரைவில் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்