இந்நிலையில் திமுகவிடம் ஐக்கியமாக தேமுதிக விருப்பப்படுவது போல் சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் ஒரு தகவல் பரவி வருகிறது. அதில் தேமுதிக இளைஞர் அணி தலைவரும், விஜயகாந்தின் மைத்துனருமான சுதீஷ் திமுக மூத்த தலைவர் துரை முருகனை ரகசியமாக சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.
தங்களின் எதிர்காலம் மோசமாகிவிட்டதாலும், கலைஞரை சந்தித்து அவரிடம் மன்னிப்புக் கேட்க, விஜயகாந்தும், பிரேமலதாவும் விரும்புவதாகவும், அதற்கு ஏற்பாடு செய்ய வழி செய்யுமாறு துரை முருகனிடம் சுதீஷ் கேட்டதாக ஃபேஸ்புக்கில் தகவல்கள் வருகின்றன.
அதற்கு பதில் அளித்த துரைமுருகன், கொஞ்சம் பொறுங்க, முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் முடியட்டும், அதற்கு அப்புறம் வந்து கலைஞரைப் பாருங்க என்று கூறி சுத்தீஷை அனுப்பி வைத்துள்ளார் எனவும் பேசப்படுகிறது.