நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், திமுக - காங்கிரஸ் கட்சி கூட்டணி சார்பில், திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிட்டவர் விஷ்ணு பிரசாத். ஆனால், தேர்தலில் இவர் படுதோல்வி அடைந்தார்.
இதனால், எனது தோல்விக்கு திமுகவும், தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர்தான் காரணம் என பகிரங்கமாக குற்றம் சாட்டினார். மேலும், இது குறித்து ஒரு பிரபல வார இதழில் பேட்டி கொடுத்தார்.
இதனால், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கூறி, விஷ்ணு பிரசாத்தை, காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக, மாநிலத் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவித்துள்ளார்.