கரூர் பசுபதீஸ்வரர் ஆலயத்தில் இந்து மக்கள் கட்சியின் தமிழகம் தலைவர் அர்ஜின் சம்பத் ஸ்ரீ ராமநவமியையொட்டி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கி ஸ்ரீ ராமபிரானின் படத்தையேந்தி அங்கிருந்து ஊர்வலமாக வந்தார். இதையொட்டி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், புனிதமான ராமநவமி தினம், இந்த ராமநவமி தினத்தையொட்டி இந்து மக்கள் கட்சி தமிழகம் சார்பில் அனைத்து திருக்கோயில்களிலும் அதே இடத்தில் ராமர் கோயில் அமைய வேண்டுமென்றும், ராமர் பாலத்தை காத்திட வேண்டியும் ஆங்காங்கே பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்ட பிரசாதங்கள் தரப்பட்டு வருகின்றது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில், கரூர் பசுபதீஸ்வரர் ஆலயம் என்று பல ஆலயங்கள் முன்பும், அருகிலேயும் மதுபானக்கடைகளை கொண்டு வர திட்டம் தீட்டியுள்ளனர். ஆனால் அதை நிறுத்த வேண்டுமென்றும், ஏற்கனவே மதுவிலக்கு அடிப்படை கொள்கைகளை வலியுறுத்தி பூட்டி வருகின்றனர். ஆகையால் கோயில் மற்றும் வணிக நிறுவனங்கள் அருகே மதுபானக்கடைகளை வைத்தால் மஹா பாரத யுத்தத்தை சந்திக்க வேண்டுமென்றும் எச்சரித்தார்.
மேலும் டெல்லியில் போராடும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கின்றோம், அதே நேரத்தில் தமிழகத்தில் உள்ள போயஸ் கார்டன் மற்றும் கோபாலபுரம் பகுதியில் போராட்டம் நடத்த மாற்றியோசிக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தார். ஏனென்றால் 50 ஆண்டு காலமாக இந்த கட்சிகள் இருவர்கள் தான் மாறி, மாறி ஆட்சி செய்து விவசாயம் கெட்டுப்போனதற்கே காரணம் என்றும் குறை கூறினார்