ரயிலில் இருந்த ஓட்டை… பயணிகள் அச்சம்!

திங்கள், 8 மார்ச் 2021 (16:26 IST)
திருச்சியில்  ரயிலில் மிகப்பெரிய அளவுக்கு ஓட்டை இருந்ததைக் கண்டு பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.

திருச்சியில் இருந்து சென்னை எழும்பூர் வரை இயக்கப்படும் சோழன் விரைவு ரயிலில் மிகப்பெரிய அளவில் ஓட்டை இருந்துள்ளது. ரயிலின் எஸ்-4 பெட்டியில் கழிவறை அருகில் ஒரு குழந்தை தவறி விழும் அளவுக்கு அந்த ஓட்டை இருந்துள்ளதாம். இதனால் பயணிகள் மிகுந்த அச்சத்தோடு பயணம் மேற்கொண்டுள்ளனர். இது சம்மந்தமானப் புகைப்படம் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்