நடிகர் ரித்தீஷ் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டார். கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு மு.க.அழகிரி திமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு அவருடன் ரித்தீஷ் எம்.பி.யும் இணைந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
பிறகு செய்தியாளர்களிடம் ரித்தீஷ் கூறியதாவது, திமுகவில் ஸ்டாலின் ஆதரவாளர்களுக்கே இடமளிக்கப்படுகிறது. ஸ்டாலின் திமுக தலைவராவதற்கு என்ன வேண்டுமானாலும் செய்வார். வருகிற திமுக உட்கட்சி தேர்தலுக்கு பிறகு கலைஞரையும் திமுகவிலிருந்து ஸ்டாலின் வெளியேற்றிவிடுவார். திமுகவிலிருந்து பலர் அம்மாவை சந்தித்து அதிமுகவில் சேருவார்கள் என்று ரித்தீஷ் கூறினார்.