முட்டையை ஒரு ரொட்டித்துண்டு பிடிக்கும் அளவு உள்ள பாத்திரத்தில் ஊற்றி நன்கு அடித்த பின் அரைத்து வைத்துள்ள விழுது, பால் இவற்றை நன்கு ஒன்று சேரக் கலக்கவும்.
தோசைக் கல்லை அடுப்பில் வைத்துக் கல் காய்ந்ததும், அதில் கால் தேக்கரண்டி நெய் ஊற்றிக் காய்ந்ததும் ஒரு துண்டு ரொட்டியைத் தயார் செய்து வைத்துள்ள முட்டையில் இரண்டு பக்கமும் தோய்த்து நெய்யின் மேல் வைக்கவும்.
சுற்றி கால் தேக்கரண்டி நெய் ஊற்றவும். கீழே பொன்னிறமானதும் திருப்பி மறுபக்கமும் சிவந்ததும் எடுக்கவும் ரொட்டியை முட்டையில் முன்னாலேயே ஊற வைக்காமல், வறுக்கும் முன்தான் தோய்த்து எடுக்க வேண்டும்.