2வது நாளாக தொடரும் ராமேஸவ்ரம் மீனவர்கள் போராட்டம்

ஞாயிறு, 17 மார்ச் 2013 (11:17 IST)
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்யக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சுமார் ஐந்தாயிரம் மீன்பிடித் தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக, 900 விசைப்படகுகள் கடலுக்குள் செல்லவில்லை. மீன்பிடித் தொழில் தொடர்பான கடைகள் மற்றும் நிறுவனங்கள் கடந்த இரு நாட்களாக மூடப்பட்டுள்ளன.

மீனவர்களின் போராட்டத்தினால் 2 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்