சென்னையில் லஞ்சம் வாங்கிய சுங்க இலாகா பெண் அதிகாரி, ஏஜெண்டு, உதவியாளரை சி.பி.ஐ கைது செய்துள்ளனர்.
திருவொற்றியூர் கே.வி.கே. குப்பம் அருகே மத்திய அரசு நிறுவனமான சான்கோ கண்டெய்னர் சரக்கு பெட்டக முனையம் உள்ளது. சென்னை துறைமுகத்திற்கு சரக்குகளை ஏற்றி செல்லும் கண்டெய்னர் பெட்டிகளில் உள்ள பொருட்களை இங்கு வைத்து சோதனையிட்டு சீல் வைத்து அனுப்புவது வழக்கம்.
இந்த சரக்கு பெட்டக முனையத்தில் சுங்க இலாகா பரிசோதனை அதிகாரியாக பணியாற்றி வரும் தேன்மொழி (35) அண்ணாநகரில் வசித்து வருகிறார்.
உடனடியாக ஊழியர்கள் அனைவரையும் வெளியேற்றிய சி.பி.ஐ. அதிகாரிகள், தேன்மொழியை மட்டும் அறையில் வைத்து சோதனை நடத்தினர். அப்போது, அவரது அறையில் கணக்கில் இல்லாத லேப்டாப், இசைக் கருவிகள், அழகு சாதன பொருட்கள், நவீனரக சேர் மற்றும் ரொக்க பணம் ஆகியவை சி.பி.ஐ பறிமுதல் செய்தது.
இவை அனைத்தையும் தேன்மொழி லஞ்சமாக வாங்கியிருப்பது விசாரணையில் தெரிந்தது. இதனையடுத்து தேன்மொழி, அவருக்கு உடந்தையாக இருந்த உதவியாளர் ஆனந்தன்,ஏஜெண்டு ஒருவரையும் சி.பி.ஐ கைது செய்து சிறையில் அடைத்தது.