ரெயில்வே பாதுகாப்பு படை சட்டம்: ஜெயலலிதா எதிர்ப்பு

புதன், 29 பிப்ரவரி 2012 (00:48 IST)
புதிதாக கொண்டு வரப்படும் ரெயில்வே பாதுகாப்பு படை சட்டத்தை ரத்து செய்ய ரெயில்வே அமைச்சகத்துக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும் எனக்கோரி முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் சட்டம் ஒழுங்கு மற்றும் காவல்துறை ஆகியவை மாநில அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும்.

நாட்டின் அரசியலமைப்புக்கு எதிரான இச்சட்டம் கொண்டுவரப்பட்டால் மாநில அரசின் உரிமைகள் பறிக்கப்படும் எனவும் அக்கடிதத்தில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்

வெப்துனியாவைப் படிக்கவும்