இந்த நிலையில் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த ரங்கசாமி ஒரு தொகுதியை ராஜினாமா செய்ததால் என்.ஆர். காங்கிரசின் பலம் 14 ஆக குறைந்தது.
சட்டப்பேரவையில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி ஆகியவை தற்போது சமபலத்தில் உள்ளது. இதில் ஆளும் கட்சியான என்.ஆர். காங்கிரசுக்கு கூடுதலாக சுயேச்சை உறுப்பினரின் ஆதரவு மட்டும் உள்ளது.
இதுவரை புதுச்சேரி சட்டப்பேரவையில் சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. தேர்தலில் எதிர்க்கட்சிகள் போட்டியிட்டால் ஆட்சிக்கே ஆபத்தாக முடியும் என்பதால் ரங்கசாமி, காங்கிரசின் ஆதரவை பெற முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் ரங்கசாமி இன்று காலை திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றார். அங்கு சோனியா காந்தியை சந்தித்து காங்கிரசின் ஆதரவை கோருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.