வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை ஏற்பட்டுள்ளதால் கடலோர தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உள் தமிழகம், கேரளா, இலட்சத்தீவில் அநேக இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தெற்கு கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகாவில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடக்கு கடலோர ஆந்திரா, கடலோர கர்நாடகாவில் ஓரிரு இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெலுங்கானா, வடக்கு உள் கர்நாடகாவில் வறண்ட வானிலையே காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் குறைந்தபட்ச வெப்ப நிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.