இலங்கையில் போரை நிறுத்தி அப்பாவி தமிழர்களைக் காப்பாற்ற மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கடந்த 15ஆம் தேதி சென்னை அருகிலுள்ள மறைமலை நகரில் காலவரையற்ற உண்ணாவிரதத்தை துவக்கினார்.
"ஜெயலலிதா தொடர்ந்து தமிழ் உணர்வுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறார். அதனால் ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ உள்பட தமிழ்மான உணர்வுள்ள அனைவரும் அ.இ.அ.தி.மு.க. அணியில் இருந்து வெளியேற வேண்டும். ஈழத் தமிழ் இனத்தை காப்பாற்ற வேண்டுமானால் அதில் உண்மையான அக்கறை இருக்குமானால் காங்கிரசையும், அ.இ.அ.தி.மு.க.வையும் அம்பலப்படுத்தி தனிமைப்படுத்த வேண்டும்.
மிகுந்த உருக்கத்தோடு இனமான உணர்வோடு வைகோ மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களுக்கு பணிவோடு வேண்டுகோள் விடுக்கிறேன். தமிழகத்தில் இந்த மாற்றம் நிகழ்ந்தால் தவிர தமிழினம் அழிவது தவிர்க்க முடியாது. இது ஒரு குறைந்தபட்ச கோரிக்கைதான். வைகோவும், தா.பாண்டியனும் பரிவுடன் இதை பரிசீலிக்க வேண்டும். இது ஒரு நெருக்கடியான நேரம். ஆகவே இந்த வேண்டுகோளை ஒரு அறை கூவலாக விடுக்கிறேன்" என்று வலியுறுத்தினார்.
இதையடுத்து இன்று மாலை தனது போராட்டத்தை திருமாவளவன் கைவிட்டார். அவருக்கு பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்துவைத்தார்.