பெட்ரோல் விலை உயர்வு நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும்: தா.பாண்டியன்!

திங்கள், 9 ஜூன் 2008 (10:55 IST)
''பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு வரும் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும்'' என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறினார்.

கரூர் மாவட்ட இ‌ந்‌திய க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் பொதுக்குழு கூட்ட‌த்‌தி‌ல் கல‌ந்து கொ‌‌ள்ள வ‌ந்த அ‌க்க‌‌‌ட்‌சி‌யி‌ன் மா‌நில செயலாள‌ர் தா.பாண்டியன் செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு அ‌ளி‌த்த பே‌ட்டி‌யி‌ல், தற்போது அய‌ல்நாட்டி‌லிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெ‌‌ய் ஒரு பீப்பாய்க்கு 126 டாலராக உள்ளது. 126 டாலருக்கு ஒரு பீப்பாய் கச்சா எண்ணெ‌ய் விலை இருக்கும் போது இந்த அளவிற்கு பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலையை உயர்த்தி உள்ளார்கள்.

200 டாலர் ஆகும் போது இந்த அரசு என்ன செய்ய முடியும். இந்த விலை உயர்வை அறிவித்த மறு நாளே பிளாஸ்டிக் பொருட்கள் விலை 30 ‌விழு‌க்காடு அதிகரித்துள்ளது. இதனால் அனைத்து வாகன கட்டணங்கள் உயரும். இதனால் இந்திய வளர்ச்சியின் வேகம் கட்டுப்படுத்தப்படும்.

இந்த மாத இறுதிக்குள் பண வீக்கம் 10 புள்ளியை தாண்டி விடும். இந்த நிலை ஏற்பட்டால் மத்திய அரசின் வரவு-செலவு திட்டம் இன்னும் 2 மாதங்களில் நெருக்கடிக்கு ஆளாக நேரிடும். இதன் மூலம் மத்திய, மாநில அரசுகள் பஞ்சப்படியை உயர்த்த வேண்டிய நிலை ஏற்படும். எனவே ஒன்றை ஒன்று துரத்தும் நிலை ஏற்படும்.

இந்த பெட்ரோல் விலை உயர்வு பிரச்சினை வரும் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும். தேர்தலில் மாற்று கொள்கை கொண்ட கட்சிகளோடு கூட்டணி வைப்போம் எ‌ன்று தா.பா‌ண்டிய‌ன் கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்