அணு விஞ்ஞானி பி.கே.அய்யங்கார் காலமானார்

வியாழன், 22 டிசம்பர் 2011 (12:05 IST)
இந்தியாவின் முன்னணி அணு விஞ்ஞானிகளில் ஒருவரான பி.கே.அய்யங்கார் மும்பையில் உள்ள பிஏஆர்சி மருத்துவமனையில் நேற்று மாலை 3.25 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 80.

1974-ம் ஆண்டு பொக்ரானில் வெடிக்கப்பட்ட முதல் அணுகுண்டை வடிவமைத்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நுரையீரல் தொற்று மற்றும் கிட்னி கோளாறு காரணமாக அய்யங்கார் காலமானதாக அவரது மகன் ஸ்ரீனிவாஸ் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்