ஆபாச படம்: இந்திய பத்திரிகைக்கு பாக். நடிகை நோட்டீஸ்

செவ்வாய், 6 டிசம்பர் 2011 (13:22 IST)
தன்னுடைய ஆபாசப் படத்தை வெளியிட்டு தனது புகழுக்கு களங்கம் கற்பித்ததாக கூறி ரூ. 10 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என "எப்எச்எம் இந்தியா" என்ற பத்திரிகைக்கு பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

எப்எச்எம் இந்தியா இதழின் அட்டைப் படத்தில் வீணா மாலிக்கின் முழு நீள நிர்வாணப் படம் இடம் பெற்றிருந்தது.

இதற்கு பாகிஸ்தானில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.இதையடுத்து தான் இப்படி ஒரு போஸே கொடுக்கவில்லை என்று வீணா விளக்கம் அளித்தார்.

ஆனால் எப்எச்எம் இதழ் அதை மறுத்தது. வீணாதான் இப்படி போஸ் கொடுத்தார். மேலும் பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐஎஸ்ஐ என்ற எழுத்து நன்கு பெரிதாக தெரிய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டதாகவும், இந்த போஸுக்காக அவருக்கு பெரும் தொகையும் கொடுக்கப்பட்டதாகவும் அப்பத்திரிகை தெரிவித்தது.

இந்த நிலையில் எப்எச்எம் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் வீணா.அதில், இந்த புகைப்படம் மார்பிங் செய்யப்பட்டது. இதனால் எனது புகழுக்கும், பெயருக்கும் களங்கம் ஏற்பட்டு விட்டது.எனவே இதற்காக ரூ. 10 கோடி இழப்பீடு தர வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்