காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட தேடுதல் வேட்டையின்போது தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில்,தீவிரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்பு படை வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படை வீரர்களுக்கும் துப்பாக்கி சண்டை நடந்தது.
பல மணி நேரம் நடந்த இந்த சண்டையில் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான்.
அத்தீவிரவாதியிடமிருந்து சீன நாட்டு குண்டுகள், வெடிபொருட்கள் நிறைந்த பாக்கெட்டுகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.