காஷ்மீர் : செப்டம்பரில் 42 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்!

சனி, 2 அக்டோபர் 2010 (11:39 IST)
கடந்த செப்டம்பர் மாதத்தில் காஷ்மீரில் ஊடுருவ முயன்ற மற்றும் தேடுதல் பணியின் போது மட்டும் 42 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த 42 பேரும் ஆயுதம் தாங்கிய, பயிற்றுவிக்கப்பட்டவர்கள் என்றும், இவர்கள் உள்ளூர் மற்றும் அயல்நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும், இவர்கள் அனைவரும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் கடந்த செப்டம்பரில் கொல்லப்பட்டனர் என்றும் இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்களிடம் இருந்து பெருமளவிலான ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், கடந்த ஆண்டுகளில் இது ஒரு குறிப்பிடத்தக்க, வெற்றிகரமான நடவடிக்கை என்றும் இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்