மும்பையில் பயங்கரவாதிகள் ஊடுருவல் : பாதுகாப்பு அதிகரிப்பு

சனி, 11 செப்டம்பர் 2010 (10:23 IST)
விநாயகர் சதுர்த்தியை ப‌ண்டிகையை சீர்குலைக்கும் நோக்குடன் அயல்நாட்டு பயங்கரவாதிகள் இரண்டு பேர் மும்பைக்குள் ஊருவியிருப்பதாக மும்பை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையடுத்து மும்பையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

செய்தியாளர்கள் கூட்டத்தில், கலிமுதீன் கான் (28), ·பிஜ் சரி·ப் (25) என்ற அந்த இரண்டு பயங்கரவாதிகளின் புகைப்படத்தை பத்திரிக்கையாளர்களிடம் வெளியிட்ட காவல்துறை, அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதைத் தெரிவிக்க மறுத்துவிட்டது.

மத்திய உளவுத்துறை விடுத்த இந்த எச்சரிக்கையை அடுத்து பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக குற்றப்பிரிவு காவல் துணை ஆய்வாளர் ஹிமான்ஷராய் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்