ரயில்வே துறைக்கு ரூ. 5,000 கோடி கூடுதல் நிதி

திங்கள், 6 ஜூலை 2009 (11:35 IST)
ரயில்வே துறைக்கு இந்த நிதியாண்டில் 5 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்து பேசுகையில் இதனை அறிவித்தார்.

ரயில்வே துறைக்கான நிதி ஒதுக்கீடு 10,800 கோடி ரூபாயில் இருந்து, 15,800 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்