மணிப்பூரில் சக வீரர்கள் 6 பேரை சுட்டுக்கொன்ற இராணுவ வீரர்
வியாழன், 22 ஜனவரி 2009 (17:03 IST)
மணிப்பூரில் உக்ருல் மாவட்டத்தில் பணியில் இருந்த அஸ்ஸாம் ரைஃபிள் படைப் பிரிவைச் சேர்ந்த இராணுவ வீரர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இணை கட்டளை அதிகாரி ஒருவர் உட்பட 6 இராணுவத்தினர் பலியாகினர்.
சிங்கை காவல் நிலையப் பகுதியில் பணியிலிருந்த டி.எஸ். டாங்குல் என்ற அந்த இராணுவ வீரர் திடீரென சக வீரர்கள் மீது துப்பாக்கியால் சுட்டதாகவும், இதில், இணை கட்டளை அதிகாரி உட்பட 6 இராணுவத்தினர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்றும் செய்திகள் கூறுகின்றன.