சத்தீஷ்கர் மாநிலச் சட்டமன்றத்திற்கான முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை பலத்த பாதுகாப்புடன் அமைதியாகத் துவங்கியது. மொத்தமுள்ள 90 இடங்களில் 39 இடங்களுக்கு இன்று தேர்தல் நடக்கிறது.
இதற்கிடையில், அம்மாநிலத்தின் தன்டேவாடா மாவட்டத்தில் உள்ள பஸ்டார் பகுதியில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கும், துணை ராணுவப் படையினருக்கும் துப்பாக்கிச் சண்டை நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காலை 8 மணிக்கு துவங்கிய முதற்கட்ட வாக்குப்பதிவு மந்தமாகவே காணப்பட்டது. ஒரு சில இடங்களில் வாக்காளர்களின் எண்ணிக்கை மிகக் குறைந்த நிலையில் இருந்தது. எனினும் பஸ்டார் பகுதியில் காலை 7 மணிக்கே வாக்குப்பதிவு துவங்கிவிட்டது. இங்கு 12 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.