பதவி விலகல் முடிவை மக்களவைக்கு வெளியே அறிவிக்க மாட்டேன்!

செவ்வாய், 22 ஜூலை 2008 (12:46 IST)
சபாநாயகர் பதவியில் இருந்து விலகும் முடிவை மக்களவைக்கு வெளியே அறிவிக்க மாட்டேன என மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி தெரிவித்துள்ளார்.

ஐ.மு.கூட்டணி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் 2ம் நாள் சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்க இன்று காலை மக்களவை வந்த அவைத் தலைவரிடம், பதவி விலகம் முடிவு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

மக்களவை வளாகத்திற்கு உள்ளே செல்வதற்காக காரில் இருந்து இறங்கியபடியே அதற்கு பதிலளித்த சோம்நாத், பதவி விலகல் முடிவை இங்கே அறிவிக்க மாட்டேன் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்