உத்தராகண்டில் பேருந்து விபத்து: 17 பேர் பலி

வெள்ளி, 11 ஏப்ரல் 2008 (11:20 IST)
டெஹ்ராடூன்: உத்தராகண்ட் மா‌நிலத்தில் உள்ள டெஹ்ராடூன் அருகே நேற்று பேருந்து ஒன்று ஆழமான பள்ளத்தில் உருண்டதால் 17 பேர் கொல்லப்பட்டனர். 4 பேர் காயமடைந்தனர்.

40 பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பேருந்து ஒன்று ட்யூனி என்ற இடத்திலிருந்து விகாஸ் நகர் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது குவானு என்ற இடத்தினருகே இந்த கோர விபத்து ‌நிக‌ழ்‌ந்து‌ள்ளது.

உயிரிழந்த 17 பே‌ரி‌ன் உடல்களும் மீட்கப்பட்டுவிட்டன. காயமடை‌ந்தவ‌ர்க‌ள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மா‌நில முதல்வர் கந்தூரி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஆறுதல் கூறியுள்ளார். இறந்தோர் குடும்பத்தினருக்கு உடனடியாக நிதியுதவி செய்யுமாறு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்