கோத்ரா ரயில் எரிப்பு மற்றும் அதன் கலவரங்கள் நடந்த 2002 ஆம் ஆண்டு நானாவதி குழுவை குஜராத் அரசு நியமித்தது.
முதலில் கோத்ரா ரயில் எரிப்பு பற்றிய விசாரணைக்காக நீதிபதி கே.ஜி.ஷாவை மட்டுமே குஜராத் மாநில அரசு நியமித்தது. பிறகு நீதிபதி ஜி.டி. நானாவதி தலைமையில் இரு நபர் விசாரணைக் குழுவாக மாற்றப்பட்டது. அப்போது குஜராத் கலவரங்கள் குறித்த விசாரணையும் இந்த குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.
கடந்த 6 ஆண்டுகளாக நானாவதி குழு விசாரணை நடத்தி வரும் நிலையில் நீதிபதி கே.ஜி.ஷாவின் மறைந்தார். அவருக்குப் பிறகு நீதிபதி அக்க்ஷய் மேத்தா நியமிக்கப்பட்டுள்ளார்.