இதைக் கண்டித்து முக்கிய எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் முழு அடைப்பிற்கு அழைப்பு விடப்பட்டது. இதற்கு, காங்கிரஸ், லோக் ஜனசக்தி, இடதுசாரி கட்சிகள், பகுஜன்சமாஜ் கட்சி உட்பட எல்லா எதிர்க்கட்சிகளும் ஆதரவு அளித்தன.
முழு அடைப்பின் காரணமாக, தலைநகர் பாட்னாவில் பெருமபாலான தனியார் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பாட்னா பல்கலைக் கழகம் இயங்கியது. ஆனால் மாணவர் வருகை குறைவாக இருந்தது.
இதேபோல் சாலைகளில் வாகனப் போக்குவரத்தும் குறைந்த அளவிலேயே காணப்பட்டது. எப்போதும் பரபரப்பாக இருக்கும் தக் பங்களா சாலை வெறிச்சோடி காணப்பட்டது.
பாட்னாவில், மகாத்மா காந்தி பாலம் அருகே சாலையின் குறுக்கே தடுப்புக்களை அமைத்து எதிர்க்கட்சியினர் வாகன மறியலில் ஈடுபட்டனர்.
தேசிய நெடுஞ்சாலை எண். 28, 77, 30 ஆகியவற்றில் பல இடங்களில் எதிர்க்கட்சித் தொண்டர்கள் மறியல் செய்ததால், போக்குவரத்து தடைபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.