சல்மான் கான் இன்று சரண்டைகிறார்!

சனி, 25 ஆகஸ்ட் 2007 (12:33 IST)
மான் வேட்டையாடிய வழக்கில் தண்டனை உறுதி செய்யப்பட்ட இந்தி நடிகர் சல்மான் கான், ஜோத்பூர் நீதிமன்றத்தில் இன்று சரணடைகிறார்!

மும்பையில் உள்ள தனது இல்லத்திலிருந்து தனது வழக்கறிஞ்சருடன் புறப்பட்ட நடிகர் சல்மான் கான், விமானம் மூலம் ஜோத்பூர் செல்கிறார்.

ஜோத்பூர் நீதிமன்றத்தில் இன்று மதியம் அவர் சரணடைகிறார். சல்மான் கானுக்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய 5 ஆண்டுக்கால சிறைத்தண்டனையை எதிர்த்து சல்மான் கான் செய்த மேல்முறையீட்டை ஜோத்பூர் நீதிமன்றம் நிராகரித்துவிட்டதால், அவர் சரண்டைந்ததும் ஜெயிலில் அடைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சல்மான் கான் சரணடைவது குறித்து ஜோத்பூர் நீதிமன்றத்திற்கு தாங்கள் தெரிவித்துவிட்டதாக அவருடைய வழக்கறிஞர் தீபேஷ் மேத்தா கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்