அல்-கய்தா மிரட்டலை சந்திக்க தயார் : மத்திய அரசு

Webdunia

திங்கள், 6 ஆகஸ்ட் 2007 (17:28 IST)
அல் - கய்தா தீவிரவாதிகளின் மிரட்டலை சந்திக்க இந்தியா தயாராக இருப்பதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஷ்வால் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, இந்தியா மீது தாக்குதல் நடத்தப்படும் என சர்வதேச பயங்கரவாத அமைப்பான அல்-கொய்தா மிரட்டல் விடுத்திருந்தது. இது தொடர்பாக அந்த அமைப்பின் சார்பில் வெளியான வீடியோ கேசட்டில் தோன்றிய ஆடம் கடான், டெல் அவிவ், மாஸ்கோ மற்றும் டெல்லி ஆகிய நகரங்களை தாக்குவது தங்களது அடுத்த கட்ட இலக்கு என்று கூறியுள்ளான்.

காஷ்மீர் மாநிலத்தில் அமெரிக்காவில் உதவியோடு 1,00,000 முஸ்லிம்களை இந்தியா கொன்று குவித்துள்ளது என்று தெரிவித்தான். அரபு நாடுகளில் உள்ள எண்ணெய் நிறுவனங்களை அபகரிக்க அமெரிக்க நினைப்பதாகவும் ஆடம் கடான் தெரிவித்துள்ளான்.

இந்நிலையில், அல் கொய்தாவினஎந்தவித மிரட்டலையும் சந்திக்க தயாராக இருப்பதாகவும், அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள பாதுகாப்பு படை வீரர்கள் தயாராக உள்ளதாகவும் மத்திய உள்துறை இணை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஷ்வால் தெரிவித்துள்ளார்.

மிரட்டல் தொடர்பாக இதுவரை எந்தவித உறுதியான தகவலும் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்