ஆந்திராவில் தொலைக்காட்சி கோபுரம் குண்டு வைத்து தகர்ப்பு

Webdunia

வியாழன், 12 ஜூலை 2007 (16:02 IST)
ஆந்திர மாநிலத்தில் தூர்தர்ஷனுக்கு சொந்தமான கோபுரத்தை நக்சலைட் தீவிரவாதிகள் குண்டு வைத்து தகர்த்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணம் மாவட்டத்தில் உள்ளது சின்டபள்ளி என்ற கிராமம். இந்த கிராமத்தில் தூர்தர்ஷனுக்கு சொந்தமான கோபுரம் உள்ளது. இந்த கோபுரத்தை நக்சலைட் தீவிரவாதிகள் நேற்றிரவு குண்டு வைத்து தகர்த்தியுள்ளனர்.

பயங்கர ஆயுதங்களுடன் வந்த சுமார் 150 நக்சலைட் தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தி இருப்பதாகவும், இதில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் காவல் துறை உயர் அதிகாரி தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்