உத்திரபிரதேசத்தில் மின்னல் தாக்கி 6 பேர் பலி

Webdunia

செவ்வாய், 26 ஜூன் 2007 (13:19 IST)
உத்திரபிரதேச மாநிலம் சொனேபத்ரா மாவட்டத்தில் மின்னல் தாக்கி 5 சிறுவர்கள் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 8க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

உத்திரபிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதில் சொனேபத்திரா மாவட்டத்தில் ரந்தா கிராமத்தில் உள்ள பாபினி பகுதியில் மின்னல் தாக்கியதில் 5 சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாகவும், 8 பேர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

படுகாயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்த அவர், இதேபோல், தும்ரா கிராமத்தில் உள்ள பிந்தாம்கஞ் பகுதியில் மின்னல் தாகியதில் விவசாயி ஒருவர் பலியாகி இருப்பதாக தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்