அம்பகாமம் பழைய கண்டி வீதி வழியாக நேற்று காலை 10.00 மணிக்கு சிறிலங்க இராணுவத்தினர் முன்னேறத் துவங்கியதாகவும், அவர்களை எதிர்கொண்டு விடுதலைப் புலிகள் தாக்கியதாகவும், புலிகள் தெரிவித்துள்ளதாக புதினம் செய்தி தெரிவிக்கிறது.
இந்த மோதலில் கொல்லப்பட்ட சிறிலங்க படையினரின் 7 சடலங்களையும், அவர்கள் போட்டுவிட்டு ஓடிய துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களைத் தாங்கள் கைப்பற்றியுள்ளதாகவும் புலிகள் தெரிவித்துள்ளனர்.