பாக்தாத்தில் கார் குண்டுவெடிப்பு: 22 பேர் பலி

சனி, 27 டிசம்பர் 2008 (18:10 IST)
பாக்தாத் பேருந்து நிலையத்திற்கு அருகே நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலுக்கு 22 பேர் உயிரிழந்துள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாக்தாத் நகரின் காதிமியா பகுதியில் உள்ள ஷிட்டி மாவட்டத்தில் உள்ள மசூதிக்கு அருகே இத்தாக்குதல் இன்று நடத்தப்பட்டதாக பாதுகாப்பு நடவடிக்கைப் பிரிவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இன்று மதியத்திற்கு பின்னர் நடத்தப்பட்ட இத்தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட பலர் உயிரிழந்ததாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்