இலங்கை : பேருந்தில் குண்டு வெடிப்பு : 23 பேர் பலி!

வெள்ளி, 25 ஏப்ரல் 2008 (20:35 IST)
இலங்கை தலைநகர் கொழும்புவிற்கு அருகே பயணிகள் பேருந்து ஒன்றில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் 23 பயணிகள் கொல்லப்பட்டனர். 40க்கும் அதிகமான பயணிகள் காயமடைந்தனர்!

சிறிலங்க போக்குவரத்துக் கழகத்தின் பேருந்து ஒன்று பிலியந்தலை என்ற இடத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் பேருந்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததாக கொழும்பு செய்திகள் கூறுகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்