இந்த ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை வகித்த தென்னாபிரிக்க தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த மதுரை, "போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து சிறிலங்க அரசு ஒருதலையாக வெளியேறியது தொடர்பாக இந்திய அரசு எந்த வருத்தமும் தெரிவிக்கவில்லை.
சிறிலங்கா அரசிற்கு இந்தியா வழங்கும் அனைத்து இராணுவ உதவிகளையும் நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்" என்றார்.
முன்னதாக, கண்டன மனு ஒன்று தென்னாபிரிக்க மனித உரிமை ஆணையகத்தின் தலைவர் ஜோடி கோலப்பனிடம் வழங்கப்பட்டது.