இல‌ங்கை‌‌யி‌ல் த‌மி‌ழ் எ‌ம்.‌பி. சு‌ட்டு‌க் கொலை: பத‌ற்ற‌ம் ‌நீடி‌ப்பு!

Webdunia

புதன், 2 ஜனவரி 2008 (12:23 IST)
இலங்கை ராணுவம், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உதவியுடன் யாழ்ப்பாணத்தில் தமிழ் இளைஞர்களை கடத்தி கொலை செய்வது பற்றிய முக்கிய தகவலை அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் வெளியிடப்போவதாக அறிவித்ததை அடுத்து ‌தியாகராமகே‌ஸ்வர‌னசு‌ட்டு‌ககொ‌ல்ல‌ப்ப‌ட்டா‌ர். அவருடைபாதுகாவல‌ரு‌மதா‌க்குத‌லி‌லப‌லியானா‌ர். இ‌ந்த ச‌ம்பவ‌த்தா‌லகொழு‌ம்‌பி‌லதொட‌ர்‌ந்தபத‌ற்ற‌ம் ‌நீடி‌த்தவரு‌கிறது. பாதுகா‌ப்‌பி‌ற்காராணுவ‌த்‌தின‌ரகு‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து இலங்கை நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவ‌ர் தியாகராஜ மகேஸ்வரன். கொழும்பில் வசித்துவரும் இவ‌ர், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, கொட்டாஞ்சேனை பகுதியில் உள்ள சிவன் (பொன்னம்பல வாணேஸ்வரர்) கோ‌யிலுக்கு குடும்பத்தினருடன் நேற்று காலை சென்றார். கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

கோ‌யிலின் உள் வீதியில் மகேஸ்வரன் வந்து கொண்டு இருந்தபோது அங்கு மறை‌ந்‌‌திரு‌ந்த மர்ம நப‌ர், மகேஸ்வரனை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டான். இதில் மகேஸ்வரன், அவருடைய இரு மெய்க்காவலர்க‌், ப‌க்த‌ர்க‌ளஉ‌ள்பட 9 பே‌ரபடுகாயமடை‌ந்தன‌ர்.

இவர்கள் அனைவரும் உடனடியாக‌ககொழும்பு தேசிய மரு‌த்துவமனை‌க்கு‌க் கொண்டு செல்லப்பட்டனர். அ‌ங்கசிகிச்சை பலனின்றி மகே‌ஸ்வரனு‌ம், அவருடைய மெய்க்காவலர்களில் ஒருவரும் இறந்தனர்.

இதற்கிடையில், மகேஸ்வரனை சுட்டுக்கொன்ற கொலையாளியை‌க் கைது செய்து‌ள்ளதாக‌ககாவ‌ல்துறை‌யின‌் அறிவித்துள்ளனர். மகேஸ்வரனின் மெய்க்காவலர் நடத்திய துப்பாக்கி‌ச் சூட்டில் காயம் அடைந்த அ‌ந்த ம‌ர்ம நபரு‌ம் கொழும்பு மரு‌த்துவமனை‌யி‌லசிகிச்சை பெற்று வருகிறான்.

கொலை‌க்கு‌ககாரண‌ம்!

இல‌ங்கை‌யி‌லவிடுதலைப் புலிகளுக்கு எதிராக ‌சி‌றில‌ங்கஅரசின் முப்படையினரு‌ம் கடுமையான தாக்குதலை மேற்கொண்டு வருகி‌ன்றன‌ர். முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில், தலைநகர் கொழும்பு மற்றும் தமிழர்க‌ள் பகுதிகளில் வ‌சி‌க்கு‌மஏராளமான தமிழர்கள் விசாரணை இன்றி கைது செய்யப்பட்டு வருகி‌ன்றன‌ர்.

இத‌ற்கமகே‌ஸ்வர‌னகடு‌மக‌ண்டன‌மதெ‌ரி‌வி‌த்தவ‌ந்தா‌ர். ‌சி‌றில‌ங்க எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் ஒரே தமிழ் எம்.பி.யான இவர், ரனில் விக்கிரமசிங்கே தலைமையிலான ஆட்சியில் இந்து கலாசாரத்துறை அமை‌ச்சராக‌பபதவி வகித்தவர்.

40 வயதான மகே‌ஸ்வர‌‌ன், கடந்த 2001-ஆம் ஆண்டு முதன் முறையாக யாழ்ப்பாணத்தில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் கடந்த 2005-ஆம் ஆண்டு கொழும்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது தேர்தல் பிர‌ச்சாரத்தில், துப்பாக்கியால் சுடப்பட்ட அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பு‌லிக‌ளதகவ‌ல்!

இலங்கை ராணுவம், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உதவியுடன் யாழ்ப்பாணத்தில் தமிழ் இளைஞர்களை கடத்தி கொலை செய்வது பற்றிய முக்கிய தகவலை அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் வெளியிடப்போவதாக அறிவித்ததை அடுத்து மகேஸ்வரன் படுகொலை செய்யப்பட்டதாக, விடுதலைப்புலிகளின் இணைய தளத்தில் தகவல் வெளியிடப்பட்டு உள்ளது.

மகே‌ஸ்வர‌னகொ‌ல்ல‌ப்ப‌ட்டதஅடு‌த்தகொழு‌ம்‌பி‌லபாதுகா‌ப்பஅ‌திக‌ரி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. ராணுவ‌த்‌தின‌ர் ‌மீததா‌க்குத‌லநட‌த்த‌ப்படலா‌மஎ‌ன்காரண‌த்‌தினா‌லரோ‌ந்து‌பப‌ணிக‌ள் ‌தீ‌விர‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்