பெனா‌‌சிரு‌க்கு தே‌ர்த‌லி‌ல் வெ‌ற்‌றி ‌கிடை‌க்காது: கரு‌த்து‌க் க‌ணி‌ப்‌பி‌ல் தகவ‌ல்!

Webdunia

சனி, 27 அக்டோபர் 2007 (18:18 IST)
தற்கொலை‌படை தாக்குதலில் இருந்து தப்பிய முன்னாள் பிரதமர் பெனாசிருக்கு அனுதாப அலை ஏதும் இல்லஎ‌ன்று‌ம், அவருக்கு பொது‌ததேர்தலில் வெற்றி கிடைக்காது என்று‌பா‌கி‌ஸ்தா‌னி‌லநட‌த்த‌ப்‌பட்கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

ஊழ‌லகு‌ற்ற‌ச்சா‌ற்‌றி‌ல் ‌சி‌க்‌கிபாகிஸ்தா‌னி‌னமுன்னாள் பிரதமர் பெனாசிர் பு‌ட்டேகட‌ந்த 8 ஆண்டுகளாவெ‌ளிநாடுக‌ளி‌லஇருந்து விட்டு கடந்த 18-ஆ‌ம் தேதி பாகிஸ்தான் திரும்பினார்.

அ‌ப்போதகரா‌ச்‌சிய‌ி‌லமனித வெடிகுண்டு மூலம் அவரை கொல்ல நடந்த முயற்சியில் 165 பேர் பலியானார்கள். 400 ‌க்குமமே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ளபடுகாயம‌டைந்தன‌ர்.

இந்த‌தா‌க்குதலா‌லபெனா‌ச‌ிர் மீது அனுதாப அலை வீசுகிறதா? வரு‌கி‌ன்பொது‌ததேர்தலில் அவரது கட்சிக்கு வெற்றி கிடைக்குமா? என்பது குறித்து அ‌ங்கு‌ள்நிறுவனம் கருத்து கணிப்பு நடத்தியது.

இந்த கருத்துக்கணிப்பில் 58 ‌விழு‌க்கா‌ட்டி‌ற்கு‌மஅதிகமானவர்கள் பெனாசிருக்கு அனுதாப அலை வீசவில்லை, அவரது செல்வாக்கும் அதிகரிக்கவில்லை. அவருக்கு தேர்தலில் வெற்றி கிடைக்க வாய்ப்பு இல்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

அதிபர் முஷாரப்புடன் பெனாசிர் உடன்பாடு வைத்துக் கொள்வதை 53 ‌விழு‌க்கா‌ட்டி‌ற்கு‌மமேற்பட்டவர்கள் எதிர்க்கிறார்கள்.

முஷாரப் அதிபர் பதவியில் நீடிக்க வேண்டும் என்று 50 ‌விழு‌க்கா‌ட்டினரு‌ம், நீடிக்க கூடாது என்று 50 ‌விழு‌க்கா‌ட்டினரு‌ம் கருத்து தெரிவித்துள்ளனர்.

அவர் ராணுவ தளபதி பதவியில் இருந்து விலக வேண்டும் என்று 35 ‌விழு‌க்கா‌ட்டின‌ர் மட்டுமே விரும்புகிறார்கள் என்பதும் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

கராச்சி, ராவல்பிண்டி, இஸ்லாமாபாத், லாகூர் ஆகிய 4 முக்கிய நகரங்களில் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்