கராச்சி குண்டு வெடிப்பு : மூவர் மீது சந்தேகம்

Webdunia

ஞாயிறு, 21 அக்டோபர் 2007 (12:48 IST)
கராச்சியில் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்பிருப்பதாக 3 பேர் மீது காவல்துறையினர் சந்தேகம் அடைந்துள்ளனர்.

குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடங்களில் கைப்பற்றப்பட்ட கை ரேகைகளை வைத்தும், உடல்களை வைத்தும் புலனாய்வு செய்யப்பட்டு வருகிறது.

இந்த குண்டு வெடிப்பில் தொடர்பிருப்பதாக 3 பேரின் பெயர்களை புலனாய்வுத் துறை பட்டியலிட்டுள்ளது. தற்கொலைத் தாக்குதல் நடத்தியவனை அடையாளம் காண, குண்டு வெடிப்பில் சிதறிய உடல்கள் டி.என்.ஏ. சோதனைக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

முதல் குண்டு வெடிப்பில் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட 1 கிலோ எடை கொண்ட கையெறி குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

கராச்சியில் நேற்று முன்தினம் நிகழ்ந்த குண்டு வெடிப்பில், 139 பேர் உயிரிழந்தனர். 500 பேர் காயமடைந்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்