இந்தோனேசியாவில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு சுனாமி அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவுகளில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இன்று காலை அங்குள்ள லியாஸ் மாவட்டத்தில் கடலுக்கு அடியில் 20 கி.மீ. ஆழத்தில் இந்த நில நடுக்கம் உருவானது. ரிக்டர் அளவில் 6.4 புள்ளி பதிவானது.