கொழும்புவில் குண்டு வெடிப்பு : 2 ராணுவத்தினர் பலி!

இலங்கைத் தலைநகர் கொழும்புவில் ராணுவத்தினர் சென்ற பேருந்தை குறிவைத்து நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் 2 ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். 4 பேர் காயமுற்றனர்.

கொழும்பு கோட்டை பகுதியில் உள்ள ரெக்ளமேஷன் சாலையில் சென்றுக் கொண்டிருந்த போது சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததாகவும், இதில் 2 ராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும் 4 பேர் காயமுற்றதாகவும் கொழும்பு செய்திகள் கூறுகின்றன.

இத்தாக்குதலிற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமே காரணம் என்று சிறிலங்க ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

இத்தாக்குதலில் ராணுவத்தினர் மட்டுமின்றி 2 அப்பாவிகள் காயமுற்றதாகவும் அச்செய்தி கூறுகிறது,

வெப்துனியாவைப் படிக்கவும்