அணு சக்தி : தேச நலன் முடிவு செய்யட்டும்!

Webdunia

திங்கள், 20 ஆகஸ்ட் 2007 (16:28 IST)
PTI PhotoPTI
இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பை தங்களால் ஏற்க முடியாது என்றும், அது தொடர்பாக அரசு மேற்கொண்டு எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளக்கூடாது என்றும், மீறினால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மார்க்சிஸ்ட் கட்சி கூறியிருப்பது மத்திய அரசிற்கு அரசியல் ரீதியான நெருக்கடியை உருவாக்கியுள்ளது!

இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு நமது நாட்டின் எதிர்கால எரிசக்தித் தேவையைக் கருத்தில் கொண்டே முன்னெடுக்கப்படுகிறது என்று பிரதமரும், நமது அணு உலைகளுக்குத் தேவையான எரிபொருளைப் பெற இந்த ஒத்துழைப்பு அவசியமானது என்று நமது விஞ்ஞான சமூகமும் உறுதியாகக் கூறிவிட்ட நிலையில், சற்றேறக்குறைய இரண்டு ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடத்தி அதனை நடைமுறைப்படுத்துவதற்கான 123 ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மார்க்சிஸ்ட் கட்சி மத்திய அரசிற்கு இப்படிப்பட்ட நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

PIB PhotoPIB
மத்திய அரசிற்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்துவரும் மார்க்சிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரி கூட்டணிக் கட்சிகள், அமெரிக்காவுடனான அணு சக்தி ஒத்துழைப்பை எதிர்ப்பதற்கு கூறிவரும் காரணங்கள் அனைத்தும் பிரதமர் மட்டுமின்றி, அணு சக்தி ஆணையத்தின் தலைவர் அனில் ககோட்கரும் விளக்கமளித்துள்ளனர். நாளை நாடாளுமன்றத்தில் விதி எண் 193ன் கீழ் விவாதம் நடந்த பிறகு இறுதியாக மீண்டும் பிரதமர் விளக்கம் அளிக்க உள்ளார்.

ஆனால், அதுவரையெல்லாம் காத்திருக்காமல், அமெரிக்காவுடனான அணு சக்தி ஒத்துழைப்பை முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும் என்றும், மீறினால் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மிரட்டியிருப்பது, கொள்கை ரீதியான கண்மூடித்தனமான நடவடிக்கையாகவே தெரிகிறது.

"நாங்கள் மார்க்சிஸ்ட்டுகள், எங்களால் ஏகாதிபத்திய அமெரிக்காவுடனான எந்தவித ஒப்பந்தத்தையும் ஜீரணிக்க முடியாது" என்றுதான் இவர்கள் சொல்லாமல் சொல்லியுள்ளார்கள். இவர்களுடைய நிலைப்பாட்டில் இந்த நாட்டின் எதிர்கால எரிசக்தித் தேவைக்கான கேள்விக்கு பதில் இல்லை. இருந்திருந்தால் நிச்சயம் அதனை நாடாளுமன்றத்தில் எடுத்து வைத்திருப்பார்கள். இப்படி அரசியல் தலைமைக் குழுவைக் கூட்டி விவாதித்து தான்தோன்றித்தனமாக முடிவெடுத்திருக்க மாட்டார்கள்.

தங்களுடைஏகாதிபத்திஎதிர்ப்பகைவிமுடியாமல், பழைகொள்கபாரம்பரியத்திலசிக்கிததவித்துககொண்டிருக்குமமார்க்சிஸ்ட்டுகளஒன்றஉணரவேண்டும். கம்யூனிஸ்டநாடாசீனா, தனதஎரிசக்திததேவைக்காஇன்றல்ல, நேற்றல்ல 22 ஆண்டுகளுக்கமுன்னரே, 1985 ஆமஆண்டஅமெரிக்காவுடனஇதேபோல 123 ஒப்பந்தத்திலகையெழுத்திட்டதனதஅணஉலைகளுக்கஎரிபொருளைபபெற்றவருகிறது. அந்நாட்டினகம்யூனிஸ்ட்டுகளுக்கதங்களநாட்டினதேவைகளுக்கஎன்செய்வதஎன்பதபுரிந்திருக்கிறது. ஏனென்றாலஅவர்களஅங்கஆட்சியிலஇருக்கின்றார்கள். எனவே, கொள்கையைததாண்டி பொறுப்புணர்வுடனதிட்டமிடுகிறார்கள்.

இந்அணசக்தி ஒத்துழைப்பினாலஇந்தியாவவளைக்கபபார்க்கிறதஅமெரிக்கஎன்மார்க்சிஸ்ட்டுகளினகூற்றுப்படி பார்த்தால், 22 ஆண்டுகளுக்கமுன்னரஅணஒத்துழைப்பசெய்தகொண்சீனஎந்தவிதத்திலுமஅமெரிக்காவிற்கஅடிபணிந்ததாகததெரியவில்லை. இப்படிப்படநிலையிலஇந்தியாவதனவசதிக்கஅமெரிக்கவளைக்குமஎன்றமார்க்சிஸ்ட்டுகளகூறுவதஎந்தவிதத்திலுமஏற்றுக்கொள்ளத்ததக்காஇல்லை.

நமதநாட்டகம்யூனிஸ்ட்டுகளுக்கஇரண்டமாநிலங்களைததாண்டி எந்தபபொறுப்புமஇல்லை. அங்குள்செல்வாக்கைபபயன்டுத்தி தற்பொழுதமத்திஅரசமிரட்டுகின்றனர். மேற்கவங்முதலமைச்சரமுதலாளித்துஎதிர்ப்பையெல்லாமதூரத்திலதூக்கி வைத்துவிட்டடாட்டாக்களுக்கஇடமளித்ததொழில்துறையமுன்னேற்விரும்புகிறார். ஆனால், இந்தபபார்வஅந்தககட்சிகளினஅகிஇந்தியததலைமைகளுக்கஇல்லாமலபோனதுதானதுரதிருஷ்டவசமானது.

webdunia photoFILE
அமெரிக்காவுடனாஅணசக்தி ஒப்பந்தமநாமமேற்கொண்டுவரும் 3 கட்அணசக்திததிட்டத்திற்கஎந்தவிதத்திலுமதடையாஇல்லஎன்றும், நமதஎதிர்காபாதுகாப்பைககருத்திலகொண்டஅணஆயுதசசோதனநடத்துவதற்கதடையாஇருக்முடியாதஎன்றுமஅணசக்தி ஆணையத்தினதலைவரஅனிலககோட்கரநேற்றமுன்தினமகூதெளிவாகககூறியிருந்தார்.

அதுமட்டுமின்றி, ஒரவேளநமததேசத்தினபாதுகாப்பிற்கஅச்சுறுத்தலஏற்பட்டஅதனஅடிப்படையிலநாமஅணஆயுதசசோதனநடத்தினாலுமகூட, அணசக்தி ஒத்துழைப்பமுறித்துககொள்வதற்கமுனஅததொடர்பாஇரநாடுகளுக்குமஇடையபேச்சுவார்த்தையும், அப்படிப்பட்சோதனைக்காசூழ்நிலைகளுமஆராயப்படுமஎன்று 123 ஒப்பந்தத்திலதெளிவுபடுத்தபபட்டிருப்பதையுமககோட்கரசுட்டிககாட்டியுள்ளார். இதையெல்லாமமார்க்சிஸ்ட்டுகளகண்டுகொள்ளவில்லை.

நமது அயலுறவுக் கொள்கையில் அமெரிக்காவின் தலையீடு அதிகரிக்கும் என்றும், அமெரிக்க வகுத்துவரும் உலகளாவிய ராணுவ திட்டத்தில் நம்மை வலிமையாக இணைக்கவே இந்த ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்கா முயற்சிக்கிறது என்றும், அடிப்படையற்ற வாதங்களை மார்க்சிஸ்ட் கட்சிகள் முன்வைக்கின்றன.

இது தொடர்பாக சில நாட்களுக்கு முன் வெளியிட்டிருந்த கட்டுரையில் ஒன்றைத் தெளிவுபடுத்தியிருந்தோம். அணு சக்தித் தேவைக்காக சர்வதேச அளவில் எரிபொருளைத் திரட்ட நமக்கு இந்த ஒப்பந்தம் அவசியமானது. அதேபோல, சர்வதேச அரசியல் மற்றும் வணிக ரீதியில் அமெரிக்காவிற்கு இந்தியா தேவைப்படுகிறது என்று கூறியிருந்தோம். இதனால்தான் இந்த ஒப்பந்தம் இருதரப்பிற்கும் சாதகமானது என்றும், எந்தவிதத்திலும் ஒரு வழிப்பாதையாகாது என்று பிரதமரும் விளக்கியிருக்கிறார்.

அமெரிக்காவிடம் இருந்து மட்டுமல்ல, நமது நட்பு நாடாக இருந்துவரும் ரஷ்யாவிடம் இருந்து கூட அணு எரிபொருளையும், உயர் தொழில்நுட்பத்தையும் பெறவேண்டுமெனில் அதற்கு இந்த ஒப்பந்தம் அவசியமானது என்று இந்தியாவிற்கு ரஷ்யா வலியுறுத்தியுள்ளதையும் கருத்தில் கொள்ள வேண்டும். ஆஸ்ட்ரேலியாவில் இருந்து எரிபொருளையும், என்.எஸ்.ஜி. என்றழைக்கப்படும் அணு உயர் தொழில்நுட்ப உபகரணங்களை விற்கவல்ல நாடுகளுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளவும் இந்த ஒப்பந்தம் அவசியமானது. எனவே, அடிப்படையில் இருதரப்பு ஒப்பந்தமாக இருந்தாலும், இந்த ஒப்பந்தம் சர்வதேச அளவில் நமது தேவைகளுக்கான முக்கிய திறவாகும். இதையெல்லாம் மார்க்சிஸ்ட் கட்சிகள் கணக்கிலும் எடுத்துக்கொள்ளவில்லை, கருத்திலும் கொள்ளவில்லை. அவர்களுடைய கண்களை கண்மூடித்தனமான கொள்கைப் பிடிப்பு மறைத்துவிட்டதாகவே தெரிகிறது.

இப்பிரச்சனையில் தேசத்தின் நலன் கருதி மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும். ஆட்சிக்கு ஆதரவு இல்லை என்று அறிவித்தாலும் சரி, அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வது என்ற முடிவில் இருந்து மத்திய அரசு பின்வாங்கக் கூடாது.

ஏனெனில், இன்னும் 20 ஆண்டுகளில் நமது எரிசக்தித் தேவை பன்மடங்கு அதிகரிக்கக்கூடிய நிலையில், அணு மின் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, அணு மின் உற்பத்தியை பெருக்கவும் அத்தியாவசியமானது சர்வதேச ஒத்துழைப்பு. அதற்கு வழி செய்யும் அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தை எந்த எதிர்ப்பானாலும் அதனை புறந்தள்ளிவிட்டு மத்திய அரசு ஏற்க வேண்டும்.