இந்தியா-பிரேசில்-தெ.ஆ. வர்த்தக இலக்கு 30 பில்லியின்-பிரதமர்!

Webdunia

புதன், 17 அக்டோபர் 2007 (17:22 IST)
இப்சா நாடுகளிடையே வரும் 2012ஆம் ஆண்டுக்குள் வர்த்தகம் 30 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு நடைபெற இலக்கு நிர்ணயித்து செயல்பட வேண்டும் என்று தென் ஆப்ரிக்காவில் உள்ள பிரிட்டோரியாவில் நடைபெற்ற வரும் இப்சா அமைப்பின் இரண்டாவது மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார்.

சர்வதேச அளவில் அரசியல் மற்றும் பொருளாதார வரிசையில் இப்சா நாடுகள் முக்கிய இடம் பெறும் வகையில் செயல்பட எடுக்க வேண்டிய உத்திகள் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் எடுத்துரைத்தார்.

இப்சா அமைப்பில் இந்தியா, பிரேசில், தென்னாப்ரிக்கா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த அமைப்பின் முதல் கூட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிரசில்லாவில் நடைபெற்றது.

தற்போது பிரிட்டோரியாவில் நடைபெற்று வரும் இந்த அமைப்பின் இரண்டாவது மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங், தென்னாப்ரிக்க அதிபர் தாபோ மெப்கி மற்றும் பிரேசில் அதிபர் லுலா - ா - சில்வா மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

இம்மாநாட்டில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், மூன்று நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் வரும் 2012க்குள் 30 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு நடைபெறும் வகையில் இணைந்து செயல்பட வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் இந்த இலக்கை எட்ட வரும் 2010க்குள் 15 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு மூன்று நாடுகளுக்கிடையே வர்த்தகம் நடைபெற வேண்டும் என்று கூறிய மன்மோகன் சிங், நமது வர்த்தகர்கள் இந்த இலக்கை 2009ம் ஆண்டுக்குள் எட்டி விடுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார். அதே போல் 30 பில்லியன் டாலர் வர்த்தக இலக்கையும் மூன்று நாடுகளும் இணைந்து 2012க்குள் எட்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இப்சா நாடுகளுக்கிடையேயான வர்த்தகம் வரை சம்பந்தப்பட்ட ஆசுகார் தேவையான அனைத்து வளர்ச்சி சார்ந்த நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று உறுதி அளித்தார். இப்சா உறுப்பு நாடுகளின் சந்தையில் உள்ள வாய்ப்புகளை இந்த மூன்று நாடுகளை சேர்ந்த வணிகர்கள் முழுவதுமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பு விடுத்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்