பங்குச் சந்தைகளில் ஏற்றம்!

Webdunia

புதன், 8 ஆகஸ்ட் 2007 (14:22 IST)
தொழில்நுட்ப நிறுவனங்கள், வங்கிகள் ஆகியவற்றின் பங்குகளுக்கு கிடைத்த வரவேற்பின் காரணமாக இந்தியப் பங்குச் சந்தைகளில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது!

இன்று காலை வர்த்தகத்தில் 251 புள்ளிகள் அதிகரித்து வணிகத்தை துவக்கிய மும்பை பங்குச் சந்தை, நண்பகல் 1 மணி நிலவரப்படி 362.40 புள்ளிகள் உயர்ந்து 15,295.17 புள்ளிகளாக அதிகரித்துள்ளது.

தேச பங்குச் சந்தை - நிஃப்டி குறியீடு 99.25 புள்ளிகள் உயர்ந்து 4,455.60 புள்ளிகளாக அதிகரித்துள்ளது.

தேச பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள 980 பங்குகளில் 90 பங்குகளின் விலை உயர்ந்துள்ளது.

ஹெச்.சி.எல்., விப்ரோ. டி.சி.எஸ்., டெக் மஹிந்திரா, ரோல்ட்டா இந்தியா, மோசர் பாயர், இன·போசிஸ், சத்யம் கம்ப்யூட்டர், யூனியன் பேங்க், பேங்க் ·ப் பரோடா, கனரா பேங்க், ஹெச்.டி.ஃப்.சி., பிஎன்பி, ஸ்டேட் பேங்க் ஆகியவற்றின் பங்குகளின் விலைகளும் உயர்ந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்